ஏக இறைவனின் திருப்பெயரால்...
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக

இயேசு இறை மகனா ? - தொடர் 25

இயேசு இறைமகனா - தொடர் 25

விபச்சார சந்ததி கடவுளின் மகனாக முடியாது

பைபிளில் இயேசுவின் பாரம்பர்யம்:
"வேசிப் பிள்ளைகள், விபச்சாரச் சந்ததியினர் கர்த்தரின் சபைக்கு உட்படலாகாது" என்று பைபிள் கூறுகிறது. - (உபகாமம் 23:2, 3)
விபச்சாரச் சந்ததிகள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லும் பைபிள் இயேசுவையே விபச்சார சந்ததி எனவும் கூறுகிறது.

தாமார் வம்சத்தில் பிறந்தவர் இயேசு:
தாமார் தனது மாமனாராகிய யூதாவுடன் கள்ளத் தொடர்பு கொண்டு பிள்ளை பெற்றவள் என்று பைபிள் கூறுகிறது.

அப்பொழுது "உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது?'' சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக் கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நேக்கி: வழியண்டை நீரூற்றுக்கள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டு போனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்று மாதம் சென்ற பின்பு "உன் மருமகளாகிய தாமார் வேசித் தனம் பண்ணினாள், அந்த வேசித் தனத்தினால் கர்ப்பவதியுமானாள்'' என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: "அவளை வெளியே கொண்டு வாருங்கள், அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்'' என்றான். அவள் வெளியே கொண்டு வரப்பட்ட போது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்த போது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிற போது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட போது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறி வந்ததென்ன, இந்த மீறுதல் உன் மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது. - (ஆதியாகமம் 38:13-29)

பைபிளின் மேற்கண்ட வசனத்தில் தாமார் என்ற பெண்ணைப் பற்றிக் கூறப்படுகிறது. அவள் தெரிந்து கொண்டே தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து அதன் மூலம் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள் எனக் கூறப்படுகிறது. தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக தனது மாமனாரிடம் வஞ்சகமாக அடைமானம் பெற்றுக் கொண்டாள் என்பதும் தெரிகின்றது.

ஒழுக்கம் கெட்டவள் என்று பைபிள் அறிமுகப்படுத்தும் "தாமார்' என்பவள் வழியில் தான் இயேசு பிறந்தார் எனவும் பைபிள் கூறுகிறது. மத்தேயுவின் முதல் அதிகாரத்தில் 1 முதல் 16 வரை இயேசுவின் பரம்பரைப் பட்டியல் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் தாமார் என்ற ஒழுக்கங்கெட்டவளும் இடம் பெற்றுள்ளாள்.

                                                                                தொடரும்....
இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் மூன்றாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் நான்காம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் ஐந்தாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 6-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 7-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 8-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 9-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 10-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 11-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 12-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 13-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 14-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 15-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 16-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 17-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 18-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 19-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 20-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 21-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 22-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 23-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 24-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.


Post a Comments Print this Page Send this page


உங்கள் கருத்துக்கள்
jesusinvites.com 03-மார்ச்-2012
02:46 காலை
Rafiq

பாவ மன்னிப்பை நா என்னத்துக்கு ஒரு சாதாரண மனிதனின் பெயரில் கேட்க வேண்டும் ?

என்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பெயரிலே கூட நான் கேட்க மாட்டேனே ! நான் என்னத்துக்கு ஈசாவின் பெயரில் கேட்க வேண்டும் ?

ஈசா மசீஹே அல்லாஹ்விடத்தில் பிரார்த்திருக்கும் போது அவருடைய பெயரில் கேட்பது முட்டாள்தனம்.

இயேசு, கர்த்தரிடம் பிரார்த்தனை செய்தது பைபிளில் இருக்கிறது. ஈசா நபி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தது குர்'ஆனிலும் இருக்கிறது.

என்னுடைய துஆ எப்படி தெரியுமா இருக்கும் ?

யா அல்லாஹ், நான் செய்த பாவங்களை மன்னித்து என்னை பரிசுத்தப் படுத்துவாயாக, உன்னுடைய (அல்லாஹ்வுடைய) திருநாமத்தால் என்று தான் இருக்கும்.

உங்களை போன்ற வழிகெட்ட மனிதர்கள் தான் ஒரு மனிதனின் பெயரால் பிரார்த்தனை செய்வார்கள். அந்த வழிகெடுப்பை மற்றவர்களையும் செய்யுமாறு தூண்டுவார்கள். சாத்தான் அப்படித்தான் தூண்டுவான்.

முஹம்மது (ஸல்) அவர்களும் ஈசா அவர்களும் மற்றும் ஏனைய இறைதூதர்களையும் எந்த இடத்தில் வைத்து மதிக்க வேண்டுமோ அந்த இடத்தில் மட்டுமே வைத்து நாங்கள் மதிப்போம். இறைவனின் ஸ்தானத்திற்கு கொண்டு சென்று விடமாட்டோம்.

jesusinvites.com 02-மார்ச்-2012
09:13 காலை
Esther

"குல்லு பனி ஆதம கத்தாவுன்" அப்படியென்றால் "ஆதமுடைய மக்கள் பாவம் செய்பவர்கள் என்று அர்த்தம்". பாவம் செய்தவர்கள் இல்லை.

எனக்கு அரபு தெரியாது என்பதால் நீங்கள் சொல்லுவதை சரி என்று வைத்துக்கொள்வோம். செய்பவர்கள் எனும் போது உங்களையும் என்னையும் குரித்துத்தனே சொல்லப்படுகிறது. ஆகவே நானும் நீங்களும் பாவம் செய்பவர்கள். எங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால் நங்கள் இருவரும் நரகம் செல்வோம். இந்த இரவில் கூட எங்களுக்கு மரணம் வரலாம். இந்த து ஆ வை நாங்கள் கேட்போம்
யா அல்லாஹ், நான் செய்த பாவங்களை மன்னித்து என்னை பரிசுத்தப் படுத்துவாயாக, ஈஸா அல் மசீஹின் நாமத்தினால். ஆமீன்

jesusinvites.com 01-மார்ச்-2012
09:49 காலை
Rafiq

எஸ்தர் : குல்லு பணி ஆதம காத்தஊன். என்பதன் அர்த்தம் என்ன எங்கே உள்ள்ளது?

பதில் : "குல்லு பனி ஆதம கத்தாவுன்" அப்படியென்றால் "ஆதமுடைய மக்கள் பாவம் செய்பவர்கள் என்று அர்த்தம்". பாவம் செய்தவர்கள் இல்லை. செய்பவர்கள் மா. செய்தவர்கள் இல்லை. புரியுதா ? நீங்க உங்க பிறவி பாவத்த நுழைக்க "செய்தவர்கள்"ன்னு சொல்றீங்க. செய்தவர்கள் இல்லை. பாவம் செய்பவர்கள். கடந்த காலம் இல்லை. நிகழ்காலம் அல்லது எதிர்காலம் அல்லது இரண்டும். ஏன் என்றால் ஒரு பிள்ளை பிறந்தால் கூட அது பாவம் செய்துதான் வருகிறது என்று சொல்வதற்கு நீங்கள் "பாவம் செய்தவர்கள்" என்று சொல்கிறீர்கள்.

இந்த ஹதீஸின் அர்த்தத்தை நீங்கள் திர்மிதி 2423 யிலும் இப்னு மாஜா 4241 இலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த ஹதீஸ் இன்னும் பல நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர் அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்பு தேடுபவரே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அந்த ஹதீஸின் அர்த்தம் இருப்பதை நீங்கள் காண முடியும்.

தவறு செய்பவர்கள். செய்தவர்கள் இல்லை.

jesusinvites.com 01-மார்ச்-2012
03:34 காலை
Esther

Rafiq said ஆதமுடைய மக்கள் பாவம் "செய்தவர்கள்" இல்லை. புரட்டு வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். ஆதமுடைய மக்கள் பாவம் செய்பவர்கள். பிறவி பாவம் என்பது இஸ்லாத்தில் கிடையாது.

குல்லு பணி ஆதம காத்தஊன். என்பதன் அர்த்தம் என்ன எங்கே உள்ள்ளது?

jesusinvites.com 29-பிப்ரவரி-2012
11:21 காலை
Rafiq

எஸ்தர் : விபச்சார சந்ததி கடவுளின் மகனாக முடியாது. இதட்கு என்ன ஆதாரம்?. அப்படி எங்கும் பைபிளில் சொல்லப்படவில்லை. குர்ஆனஇல் இருந்தால் காண்பித்திருக்கலாம்.

பதில் : கர்த்தரின் சபைக்கு விபச்சார சந்ததி வரக்கூடாது. சாதாரண சபைக்கே வரக்கூடாது என்றால் கடவுளின் மகனாக முடியுமா ? இல்லை விபச்சார சந்ததி சபைக்கு மட்டும்தான் வரக்கூடாது ஆனா கடவுளோட மகனா ஆகிரலாம்ன்னு சொல்ல போறீங்களா ?
---------------------------------------------------------------
எஸ்தர் : இயேசு இந்த பூமிக்கு வந்தது நல்லவர்களை தேடியல்ல. மாறாக பாவிகளை இரட்ச்சிக்க வந்ததாக பைபிள் கூறுகிறது. என்னைப் போன்ற பாவிகளுக்கு இயேசுவின் கொர்பான் பலி தேவை.

பதில் : என்னத்தம்மா பாவிய தேடி வந்தாரு ? சரி ஒருத்தன் கிறிஸ்தவனாக இருக்கிறான். ரெண்டு புள்ளங்கள புடிச்சி கற்பழிச்சிட்டான். இவனுக்கு சொர்கமா ? இவனுக்கு சொர்க்கம் கிடையாதுன்னா என்னத்துக்கு பலி ? ஒரு பாவத்தையும் மன்னிக்காத அந்த ஒன்னேமுக்கா ரூவாய்க்கு கூட வொர்த் இல்லாத பலியால என்ன பிரயோஜனம் ? ஒன்னு பலியானா பாவத்த மன்னிக்கணும். இல்லைனா சும்மா இருக்கணும். ஒரு பாவத்தையும் மன்னிக்காத பலி என்ன பலி ?
அப்புடியே எல்லா பாவத்தையும் இயேசு தூக்கிடாருன்னா என்ன ஆகணும் தெரியுமா ? உலகத்துல ரவுடி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி, பொருக்கி, திருடன், ஈவ் டீசிங் பண்ணவன், டாவடிச்சவன், பெருச ஜாலிக்காக போட்டு தள்ளுனவன், கஞ்சா அடிச்சவன், அபின் வித்தவன், சாராயம் காச்சினவன், கூட்டி குடுத்தவன், பல பேரு குடும்பத்த கெடுத்தவன், மொத்ததுல கலுசடயா உலகத்துல வாழ்ந்த அத்தன பேரும் சொர்கத்துக்கு போகணும்.
---------------------------------------------------------------------
எஸ்தர் : ஆதமுடைய சந்தியார அனைவரும் பாவம் செய்தவர்கள் என்று இஸ்லாமும் ஏற்பதாக எனது முஸ்லிம் நண்பியோருவர் சொன்னார்.
வேதாகமத்தின் படி, எல்லா மனிதரும் பாவம் செய்தவர்கள். ஆகவே பாவிகளை மீட்க இயேசு வருவதற்காக தேவன் தேர்ந்தெடுத்த சந்ததியே இது. இறைவனில் குறைக்கான நாம் அவரைவிடவும் ஞானமுள்ளவர்கள?

பதில் : ஆதமுடைய மக்கள் பாவம் "செய்தவர்கள்" இல்லை. புரட்டு வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். ஆதமுடைய மக்கள் பாவம் செய்பவர்கள். பிறவி பாவம் என்பது இஸ்லாத்தில் கிடையாது.

jesusinvites.com 29-பிப்ரவரி-2012
01:29 காலை
esther

விபச்சார சந்ததி கடவுளின் மகனாக முடியாது

இதட்கு என்ன ஆதாரம்?. அப்படி எங்கும் பைபிளில் சொல்லப்படவில்லை. குர்ஆனஇல் இருந்தால் காண்பித்திருக்கலாம். இயேசு இந்த பூமிக்கு வந்தது நல்லவர்களை தேடியல்ல. மாறாக பாவிகளை இரட்ச்சிக்க வந்ததாக பைபிள் கூறுகிறது. என்னைப் போன்ற பாவிகளுக்கு இயேசுவின் கொர்பான் பலி தேவை.
ஆதமுடைய சந்தியார அனைவரும் பாவம் செய்தவர்கள் என்று இஸ்லாமும் ஏற்பதாக எனது முஸ்லிம் நண்பியோருவர் சொன்னார்.
வேதாகமத்தின் படி, எல்லா மனிதரும் பாவம் செய்தவர்கள். ஆகவே பாவிகளை மீட்க இயேசு வருவதற்காக தேவன் தேர்ந்தெடுத்த சந்ததியே இது. இறைவனில் குறைக்கான நாம் அவரைவிடவும் ஞானமுள்ளவர்கள?

பெயர்:

மின்னஞ்சல் முகவரி:

Loading...